என் மலர்
உள்ளூர் செய்திகள்

செட்டிகுளத்தில் புதிதாக தார் சாலை அமைக்க கோரிக்கை
- செட்டிகுளத்தில் புதிதாக தார் சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
- ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளிக்கும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் முன்பு தொடங்கி குன்னுமேடு குடியிருப்பு வழியாக சிற்றேரி கடைகாலுக்கு செல்லும் பாதை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது இந்த தாா் சாலை பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது.
மேலும் போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக தார் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






