என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
    X

    வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

    • பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாக குற்றச்சாட்டு
    • மழைகாலங்களில் தண்ணீர் வருவதற்கு ஏதுவாக தூர் வார கோரிக்கை

    பெரம்பலூர்

    சின்னாறு நீர்த்தேக்கத்தில் வரத்து வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் வரத்து வாய்க்கால்கள் மூலம் சின்னாறு நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருவதில்லை. மேலும் மழைக்காலங்களில் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்வதில்லை. நீர்த்தேக்கத்தை தூர்வாருகிறோம் என்று கூறி அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×