என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
- பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டது
- ஒரு ரேசன் கடையில் ஒரு நாளைக்கு 250 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 282 ரேசன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் என மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 317 குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ரேசன் கடை விற்பனையாளர், உதவியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று (3-ந் தேதி) துவங்கியது. இப்பணி வரும் 8ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியில் 300 பேர் ஈடுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வரும் 9-ந் தேதி முதல் 13 -ந் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஒரு ரேசன் கடையில் ஒரு நாளைக்கு 250 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.






