என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை
- பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த தேவையூர் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று மதியம் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






