என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு
- வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்
- நெய்குப்பை கிரமத்தில் வசிக்கும் மீனவர்களுக்கு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே நெய்குப்பை கிராமத்தில் வசிக்கும் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில் நெய்குப்பை மீனவர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பை கிராமத்தில் மீனவ பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர், காலம் காலமாக மீன் பிடிக்கும் சுண்ணாம்பு கால்வாய் பணியும் செய்து பிழைப்பு நடத்திவருகிறோம். இந்நிலையில் மீனவர் தெருவில் வசிக்கும் மக்களை இடத்தை காலி செய்யவேண்டும், இது அரசு புறம்போக்கு இடம், இங்கு பால் குளிர்வு நிலையம் அமைக்கப்படவுள்ளது எனவே நீங்களாகவே வீட்டை காலி செய்யவேண்டும், இல்லையென்றால் நாங்களகவே புல்டோசர் வைத்து இடித்து அப்புறப்படுத்துவோம் என பால்பண்ணை தலைவர், செயலாளர், விஏஓ ஆகியோர் எங்களை மிரட்டுகின்றனர். எனவே அதனை தடுத்து மீனவ மக்கள் வசிக்கும் வீட்டிற்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.