என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்
    X

    மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, கலையரசி, அகஸ்டின், ராஜாங்கம், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலக்குழு சாமி.நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்லமுத்து, செல்லதுரை, ராஜேந்திரன், சிவானந்தம், கருணாநிதி, சரவணன், ரெங்கராஜ், மகேஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம் மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டது. மத்தியஅரசின் நடவடிக்கையால் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைக்கும் எனவே உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,

    தமிழகத்தில் ரூபாய் 55 முதல் ஆயிரத்து 130 வரை மின் கட்டணம் உயரும் என மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும், ஏற்கனவே மத்திய அரசின் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப்பெற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட மக்களை அணி திரட்டி மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட நிதியை ஒதுக்குவதை கைவிட வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் குவாரி மற்றும் கிரஷர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு கடந்த சில தினங்களுக்கு முன் பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் குவாரியில் பாறை சரிந்து இருவுர் பலி ஆனார்கள் அவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×