என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கை.களத்தூர் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
    X

    கை.களத்தூர் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

    • கை.களத்தூர் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கலெக்டரிடம் மனு
    • துணைத் தலைவர் உள்ள பட 6 பேர் கலெக்டரிடம் மனு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் ஊராட்சி தலைவர் சுமதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி இதுகுறித்து கை.களத்தூர் ஊராட்சி துணை தலைவர் செல்வக்குமார் தலைமையில் 6 வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதில் கை.களத்தூர் ஊராட்சியில் சுமார் 7 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி தலைவராக முருகேசன் மனைவி சுமதி என்பவர் உள்ளார். 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காந்தி நகர், பாதாங்கி ஆகிய பகுதிகளில் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் எங்களது பகுதி மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க தலைவரிடம் கூறினால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.

    குடிநீர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடந்த 25ம்தேதி சாலைமறியல் நடந்தது. மக்களின் பிரச்சனையை சரி செய்ய கூறினால் துணை தலைவர் மற்றும் எங்களது பகுதியை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களை தலைவரின் கணவர் முருகேசன் தகாத வார்த்தையால் திட்டி அவமதிப்பு செய்கிறார். மேலும் பல்வேறு முறைகேடுகளில் தலைவர் ஈடுப்பட்டுள்ளார். ஆகையால் ஊராட்சி மக்கள் நலனில் அக்கரை இல்லாத ஊராட்சி தலைவர் சுமதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×