என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் பயிற்சி தொடக்கம்
- பெரம்பலூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி தொடக்க விழா நடந்தது
- புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே வடக்குமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி தொடக்க விழா நடந்தது.
பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தேவகி தலைமை வகித்தார். புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன் தொடங்கி வைத்து பேசினார்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் ரமேசு கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை, நீங்களும் எளிதில் கற்றுக்கொ ள்ளலாம் என தெரிவித்தார். வடக்குமாதேவி பள்ளி ஆசிரிய பயிற்றுநர் சுப்ரமணியன் அனைத்து கற்போர்களும் முதல் நாள் உள்ள ஆர்வம் போல் தொடர்ச்சியாக வந்தால் மட்டுமே நமது இலக்கை எட்ட முடியும் என்று தெரிவித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் சசிநர்மதா வரவேற்றார். முடிவில் பள்ளியின் இடைநிலையாசிரியர் நாகராஜ் நன்றி கூறினார்.பயிற்சிபயிற்சி
Next Story






