என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
- மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
- கலெக்டரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்
பெரம்பலூர்
கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை செயலாளர் கீதா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஸ்வரி, செயலாளர் சின்னப்பொண்ணு, பொருளாளர் ஷர்மிளா பேகம், துணைத் தலைவர் பொன்மணி, துணை செயலாளர் சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்கத்தினர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலையும், கூலியும் வழங்கிட வேண்டும். அந்த திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட முதியோர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். நீண்ட காலமாக குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களின் ரேஷன் அட்டையில் என்.பி.எச்.எச். என்ற குறியீடினை பி.எச்.எச். என திருத்தம் செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை தடையில்லாமல் வழங்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் இது தொடர்பான மனுக்களை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்