என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் மதுபான கடையை மூட கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- டாஸ்மாக் மதுபான கடையை மூட கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- கடையை திறக்க கோரி மது பிரியர்கள் போராட்டம்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் வசிஷ்டபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் அவ்வழியே சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தகராறில் ஈடுபடுவதோடு, மது அருந்துவிட்டு சாலையின் குறுக்கே விழுந்து கிடப்பதாலும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருவதோடு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த கடையின் அருகில் பொதுமக்கள் குடியிருப்புகள், திருமண மண்டபம், சந்தை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் அரசு விடுமுறை என்பதால் அதே பகுதியில் போலீசார் உதவியுடன் படு ஜோராக மது விற்பனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடன் பெரம்பலூர் மாவட்ட ஜனநாயக மாத சங்கத்தின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அரசு மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி அரசு மதுபான கடை அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் திரண்டி ருந்தனர்.அவர்களிடத்தில் காவல்துறையினரும், அரசு மதுபானக் கடை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளும், உரிய நடவடிக்கைஎடுப்ப தாகவும், போராட்டத்தை கைவிட வலியுறுத்தியும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த போராட்டகாரர்கள் டாஸ்மாக் கடையை மாற்று இடத்தில் வைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம்என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடை பெற்று கொண்டிருந்த போது, டாஸ்மாக் மது பானக்கடைக்கு மது வாங்க வந்த மது பிரியர்கள் கடையை உடனடியாக திறக்க வேண்டும், எங்களுக்கு மது வேண்டும். மது குடிக்காவிட்டால் இறந்து விடுவோம் என்று கூறி தங்களுக்கு உடனடியாக மது வேண்டும் என்று கூறி பிரச்சனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடை முன்பு சாலையில் படுத்து மறியல் செய்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினரிடம் தகராறு செய்ய முயன்றதையடுத்து காவல்துறையினர், மது பிரியர்களை விரட்டி யடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து ஜனநாயக மாத சங்க நிர்வாகிகளிடம் கடையை விரைவில் மாற்று இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அகரம்சீகூர் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.






