என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
- லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளாதேவி உத்தரவின்பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மங்களமேட்டை அடுத்துள்ள சின்னாறு ஆர்ச் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீராளன் மேற்பார்வையில் மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுகொண்டிருந்த லெப்பைகுடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 43) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






