என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்றவர் கைது
- சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளுவாடி ஆற்றுப்பாலம் அருகே கடலூர் மாவட்டம், கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது 40) என்பவர் லாரி டியூப்களில் அடைத்து வைத்து சாராயம் விற்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முருகன் விற்பனைக்காக வைத்திருந்த 75 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






