என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்றவர் கைது
- சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூர் மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, கவர்பனை வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் செந்திலை(வயது 35) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






