என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
    X

    பெரம்பலூரில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

    • பெரம்பலூரில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது
    • கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசும் போது, தமிழக வரலாறு தெரியாமல், காமராஜர் பிரதமராக வரவிடாமல் தடுத்தது தி.மு.க. என வேலூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

    குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பது அமித்ஷாவிற்கு தெரியாது. எமர்ஜென்சி காலத்தில் காமராஜர் கைது செய்யப்பட்டால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியவர் கருணாநிதி. காமராஜர் மறைந்தபோது அவருக்கு தி.மு.க. அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்து, கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைத்தது தி.மு.க. என்பது அமித்ஷாவிற்கு தெரியாது. 1974-ல் அப்போதைய மத்திய அரசிற்கு எதிராக பாட்னாவில் இருந்து புறப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களால் அப்போதைய ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதேபோல் வரும் 23-ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தியாவின் நெம்பர் 1 முதலமைச்சராக செயல்பட்டு வரும் முக ஸ்டாலின், 2024-ல் பிரதமராக வருவார் என்றார். கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட அவை தலைவர் நடராஜன். மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், நல்லதம்பி, சோமுமதியழகன், ராஜேந்திரன், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், நகராட்சி துணை தலைவருமான ஹரிபாஸ்கர் வரவேற்றார். அரும்பாவூர் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×