search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனிதச் சங்கிலி போராட்டம்
    X

    மனிதச் சங்கிலி போராட்டம்

    • மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது
    • வரும் 2-ந் தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.

    பெரம்பலூர் மா.கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மா.கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் , தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் சார்பில் சமூக நல்லிணக்க போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மா.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் வீரசெங்கோலன், தொழிலாளர் கட்சி மாநில தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் கோவையில் குண்டு வீச்சு நடந்தது. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு காரணமான அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதை வரவேற்கிறோம்.

    மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் வரும் 2-ந் தேதி மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் "சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி" நடத்துவது, இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கலந்துகொள்ளவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×