என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனித சங்கிலி போராட்டம்
- மனித சங்கிலி போராட்டம் நடந்தது
- மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் நடத்தினர்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் அனைத்து மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் பாலக்கரை முன்பு நடந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். இதில் மாநில விவசாய அணி செயலாளர் வீரசெங்கோலன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ்,
தமிழ்வழி கல்வி இயக்க மாநில தலைவர் சின்னப்பா, மதிமுக மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மனிதசங்கிலி ஒன்ரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்றது, இதில் 200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story