என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுவடைக்கு முன்பே முளைத்த கடலை செடிகள்
    X

    அறுவடைக்கு முன்பே முளைத்த கடலை செடிகள்

    • அறுவடைக்கு முன்பே கடலை செடிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
    • தொடர் மழையின் காரணமாக

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் ஆலத்தூர் கேட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். மேலும் ஒரு சில விவசாயிகள் கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக கடலை செடிகள் அறுவடைக்கு முன்பே முளைத்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதையடுத்து, கடலையை செடியில் இருந்து பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×