search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    X

    25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

    • பெரம்பலூரில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    • முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா நடத்திவைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் சீர்திருத்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பிரபாகரன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா, நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டுவந்தார். தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவர் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வல்லபன், பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழங்குடியினர் மாநில தலைவர் அதியமான் நன்றி கூறினார்.

    Next Story
    ×