என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய மதகு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
    X

    புதிய மதகு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை

    • புதிய மதகு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • விவசாயிகள் சுமார் 12 அடி ஆழத்திற்கு நீரில் மூழ்கி மிகுந்த சிரமத்துடன் பலகைகள் வைத்து தண்ணீரை தேவைக்கேற்ப திறந்து மூடி வருகிறோம்.

    பெரம்பலூர்

    மூங்கில்பாடி பகுதியில் உள்ள ஏரிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. மக்காச்சோளத்தையே சாகுபடி செய்து வந்த நாங்கள், கடந்த 2021-ம் பெரிய ஏரி நிரம்பியதன் காரணமாக நெல் சாகுபடியில் ஈடுபட்டோம். விவசாயிகள் இணைந்து பாசன வாய்க்கால்களை சீரமைத்தோம். மேலும் ஏரியில் உள்ள மதகு பல வருடங்களாக சீரமைக்கப்படாததால், விவசாயிகள் சுமார் 12 அடி ஆழத்திற்கு நீரில் மூழ்கி மிகுந்த சிரமத்துடன் பலகைகள் வைத்து தண்ணீரை தேவைக்கேற்ப திறந்து மூடி வருகிறோம். நீர் அதிகமாக இருக்கும்போது உயிருக்கு ஆபத்தான முறையில் நீரில் மூழ்கி பலகை வைத்து தண்ணீரை திறப்பது சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த ஏரியில் புதிய மதகை வரும் கோடைக்குள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரிய ஏரியின் கரைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரியை முறையாக ஆழப்படுத்தி, கூடுதல் நீரைத் தேக்கி வைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×