என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூக்கில் விவசாயி பிணம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 44)விவசாயி. இவரது மனைவி நித்யா (33). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு 15 நாட்களுக்கு முன்பு வந்து உள்ளார். நேற்று தனது உடமைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இருங்களாக்குறிச்சியில் இருந்து ஆணைவாரி ஓடை செல்லும் வழியில் உள்ள புளிய மரத்தில் நிர்வாண நிலையில் மகேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதனை அவ்வழியே சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மகேஸ்வரன் யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டிருப்பாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்