என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி விவசாயி பலி
- வெங்கடேசன் எசனை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43), விவசாயி. இவர்பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வெங்கடேசன் எசனை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






