என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி முதியவர் பலி
    X

    வாகனம் மோதி முதியவர் பலி

    • சாலையை கடக்க முயன்ற போது விபத்து
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் குரும்பலூரை அடுத்து ஈச்சம்பட்டி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×