என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

    • டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்(வயது 27). நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரண்யா(24). இவர்களுக்கு திருமணமாகி அகல்யா, ஓவியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் ஆள் யாரும் இல்லாதபோது தினேஷ் தனது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த சரண்யா வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூக்கில் தினேஷ் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தினேஷின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×