என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கச்சாவடி ஊழியர்கள்  பாடை கட்டி வினோத போராட்டம்
    X

    சுங்கச்சாவடி ஊழியர்கள் பாடை கட்டி வினோத போராட்டம்

    • சுங்கச்சாவடி ஊழியர்கள் பாடை கட்டி வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • 40 -வது நாளாக தொடர்கிறது

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் சுமார் 130 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் 28 ஊழியர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று பனி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனை கண்டித்து பணி நீக்கம் செய்யப்பட்ட 28 பேரையும் நிபந்தனை இன்றி மீண்டும் பணியில் சேர்க்ககோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5- ம் தேதி ஆதார் கார்டு வாக்காளர் அட்டை அடையாள அட்டை ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை எரித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தின் 40- வது நாளான இன்று பாடை கட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்போது திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான பணி நீக்க செயலை தனியார் நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தங்களது வாழ்வாதாரத்தை பறித்து தற்கொலைக்கு தூண்டும் விதமாக சுங்கச்சாவடி நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×