என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் மீது கண்டெய்னர் மோதிய விபத்து
    X

    பஸ் மீது கண்டெய்னர் மோதிய விபத்து

    • பஸ் மீது கண்டெய்னர் மோதி விபத்து
    • 7 பயணிகள் படுகாயம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே உள்ள லப்பை காடு பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் தொழுதூர் வழியாக பெரம்பலூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்ஸினை பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 56) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    பஸ்ஸில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கடலூர் மாவட்டத்தை தாண்டி மங்களமேடு பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாகச் சென்ற கண்டைனர் லாரி எதிர்பாராத விதமாக வலது பக்கம் பஸ்ஸின் பக்கவாட்டில் மோதியது.

    இதில் அந்த பஸ்ஸில் பயணம் செய்த குன்னம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர்கள் பிரசன்னா( 16) சுதன்ராஜ்( 20 ) மற்றும் கண்ணன் (23) சரவணன்( 32) குன்னம் ஒகலூர் பகுதியைச் சேர்ந்த நதியா (24) சுவாதி( 21) மல்லிகா (21) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஒட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருளானந்தம் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×