என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் காங்கிரசார்  ஆர்ப்பாட்டம்
    X

    பெரம்பலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • பெரம்பலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • பெரம்பலூர் வருமான வரி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.

    பெரம்பலூர்:

    காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரம்பலூர் வருமான வரி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் சின்னசாமி, ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மத்திய அரசை கண்டித்து பலர் பேசினர். பின்னர் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி இணை செயலாளர் ராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சையத்பதோதீன், நகர தலைவர்கள் நல்லுசாமி, தேவராஜன், சட்டசபை ஊடகப்பிரிவு தலைவர் வசந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




    Next Story
    ×