என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் வாலிபர் பலி
    X

    சாலை விபத்தில் வாலிபர் பலி

    • சாலை விபத்தில் வாலிபர் பலியானார்
    • உறவினர் வீட்டிற்கு சென்றுவந்த போது விபரீதம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம், முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் மகபூப்கான். இவரது மகன் குலாம்செரிப் (வயது 36).

    இவர் பெரம்பலூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு பின்னர் வாலிகண்டபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஜோசப் பள்ளி அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார்.

    இதில் தூக்கி வீசப்பட்ட குலாம்செரிப், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த குலாம்செரிப் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×