search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி திருட்டு
    X

    கோவிலில் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி திருட்டு

    • கோவிலில் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி திருடப்பட்டுள்ளது
    • 3 சிறிய உண்டியல்களும் திருடிச் செல்லப்பட்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள உப்போடை பகுதியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல கோவிலை திறக்க வந்த பூசாரியான உப்போடை பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் (வயது 55) கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கோவிலுக்கு சென்று பார்த்த போது சாய்பாபா சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலி, 2 வெள்ளிக்காப்புகள், 3 சிறிய உண்டியல்கள், ஒரு பெரிய உண்டியல் ஆகியவை திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போனவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×