search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடப்பா கல் விழுந்து சிறுவன் பலி
    X

    கடப்பா கல் விழுந்து சிறுவன் பலி

    • வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி இளவரசி. இவர்களது மகள் சுபத்ரா (வயது 9), மகன்கள் சுசிவின்ராஜ் (7), சுபிராஜ் (3).

    இந்நிலையில் நேற்று ஊரில் ஒரு துக்க காரியத்துக்கு சரவணன் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுசிவின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×