என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடப்பா கல் விழுந்து சிறுவன் பலி
- வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
- வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி இளவரசி. இவர்களது மகள் சுபத்ரா (வயது 9), மகன்கள் சுசிவின்ராஜ் (7), சுபிராஜ் (3).
இந்நிலையில் நேற்று ஊரில் ஒரு துக்க காரியத்துக்கு சரவணன் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுசிவின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்