search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • கல்குவாரி ஏலத்தில் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • கருப்பு முருகானந்தம் உள்பட 16 பேர் மீது வழக்கு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி கல் குவாரி ஏலம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஏலத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க.வினரை தி.மு.க. வினர் அடித்து தாக்கினர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×