என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் பாஜக ஆர்ப்பாட்டம்
    X

    பெரம்பலூரில் பாஜக ஆர்ப்பாட்டம்

    • பட்டியல் அணி சார்பாக நடைபெற்றது
    • கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன

    பெரம்பலூர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து பெரம்பலூரில் பாஜக மாவட்ட பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பாரதிய ஜனதா கட்சி, பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் அவர்கள் கடந்த 27ம்தேதியன்று சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை கண்டித்தும், பாஜக நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதலை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் நேற்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதன்படி பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் பாஜக பட்டியல் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சைமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் மாநில துணை தலைவர்கள் பாலாஜி தேவேந்திரன், கலைச்செல்வன், மாவட்ட பொதுசெயலாளர் முத்தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நகர தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொதுசெயலாளர் ஜெயபால் நன்றி கூறினார்.

    Next Story
    ×