search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை அதிகப்படுத்த விழிப்புணர்வு
    X

    மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை அதிகப்படுத்த விழிப்புணர்வு

    • மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை அதிகப்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தலைமை ஆசிரியை தலைமையில் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் உள்ள பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை உருவாக்கவும், நூல்களை வாசிக்கும் பழக்கத்தினை அதிகப்படுத்தவும் 'வாசிப்பை நேசிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஜான்சிராணி வரவேற்று பேசினார். பேரளி ஊர்ப்புற நூலகர் முருகன் பங்கேற்றார். இதில் 4 மற்றும் 5-ம் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பயணம் நண்பர்கள் சார்பில் நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×