என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பிரச்சாரம்
- விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
- ரங்கோலி கோலம் போட்டனர்
பெரம்பலூர்:
சென்னையில் நடைபெற உள்ள 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் ரங்கோலி கோலம் போட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மகளிர் திட்ட இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ஜூலியஸ் தேயொடர், மாநில பல பயிற்றுநர் செந்தில்முருகன், வட்டார இயக்க மேலாளர் ராஜேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story






