என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
    X

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் நல அலுவலர் ராமு, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, குழந்தைகள் நல அறக்கட்டளையை சேர்ந்த முரளீஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் இம்மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

    Next Story
    ×