search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபான கடை விற்பனையாளர் மீது தாக்குதல்
    X

    மதுபான கடை விற்பனையாளர் மீது தாக்குதல்

    • மதுபான கடை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்ப்பவர் மணிதேவன்(வயது 46). இவர் நேற்று கடையை திறந்து மதுபானம் விற்பனை செய்து வந்தார். அப்போது அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இன்னாசி என்பவர் மதுபானம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மணிதேவனிடம் மது பாட்டில் வாங்கிக்கொண்டு கூகுள் பே மூலமாக பணம் செலுத்தலாமா? என கேட்டுள்ளார். அதற்கு மணிதேவன் அந்த வசதி எங்களிடம் இல்லை என கூறியுள்ளார். அதற்கு எல்லா கடைகளிலும் கூகுள் பே பயன்படுத்தப்படுகிறது. உங்க கடையில் மட்டும் ஏன் பயன்படுத்தவில்லை எனக்கூறி தகராறு செய்துள்ளார். தொடர்ந்து மதுபான கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மணிதேவனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிதேவன் கடையை பூட்டிவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபான கடை விற்பனையாளரை தாக்கிய இன்னாசியை வலை வீசிதேடி வருகின்றனர். தொடர்ந்து மதுபான கடையை மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜ் திறந்து விற்பனை செய்தார்.


    Next Story
    ×