என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது
- சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்
- சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் பிச்சை மகன் பாலாஜி (வயது25). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார். இதையறிந்த அச்சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பாலாஜியை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






