என் மலர்
உள்ளூர் செய்திகள்

குரும்பலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- குரும்பலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் புஷ்பராஜ், முன்னாள் செயலாளர் செல்வராஜ். பழனிமுருகேசன், துணை செயலாளர் தமிழ்செல்வி, ரெங்கநாயகி, பொருளாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜாராம், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், நகர செயலாளர் ராஜபூபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சிறப்பு விருந்தினராக கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் கலந்துகொண்டு தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவை கண்டித்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக துணை செயலாளர் ராமையா வரவேற்றார். முடிவில் மாவட்ட பிரதிநிதி குமரேசன் நன்றி கூறினார்.






