என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேர்
    X

    காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேர்

    • பெரம்பலூரில் காட்டுப்பன்றியை 5 பேர் வேட்டையாடினர்.
    • ரூ.1.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரல் வனச்சரக அலுவலர்கள் பழனிகுமரன், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் வனவர் குமார் , வனக்கா ப்பாளர்கள் அன்பரசு, கண்ணதாசன், சித்திக், செல்வகுமாரி, கனிமொழி, மகமாணிக்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடு பட்டபோது 5 பேர் காட்டுப்பண்றியை வேட்டையாடி கூறு போட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை அடுத்து வனத்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் செஞ்ஞேரி கிராமத்தை சேர்ந்த மாகமணி மகன் ஜெகன், நொண்டி மகன் அறிவழகன், ஊமைத்துரை மகன் ராஜ்குமார், ராஜலிங்கம் மகன் சுரேஷ், சுரேஷ் மகன் தியாகு வனவிலங்கான காட்டு ப்பண்றியை வேட்டையாடி கூறு போட்டு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த காட்டு பண்றி கறியை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்து றையினர் வழக்குபதிந்து ஜெகன் உட்பட 5 பேரை கைது செய்து அவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×