என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடும்பு வேட்டையாடி 3 பேர் கைது
- பெரம்பலூரில் உடும்பை வேட்டையாடி எடுத்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- அவர்களிடம் இருந்து 3 உடும்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே வனவிலங்கான உடும்பினை வேட்டையாடி 3 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு பிரிவை சேர்ந்த வனவர் பிரதீப், வனக்காப்பாளர்கள் கண்ணதாசன், முகமது சித்தீக் அன்பரசு, மணி கண்டன் ஆகியோர் கொண்ட வனக்குழு வினர் ஜெமீன் ஆத்தூர் செல்லி யம்மன் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுப்ப ட்டிருந்தனர். அப்போது 3 உடும்பினை வேட்டையாடி எடுத்து சென்ற 3 பேரை பிடித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் பெரியசாமி (வயது50), பெரியசாமி மகன் ஐயப்பன் (27), பிச்சைபிள்ளை மகன் பாக்கியராஜ்(31) ஆகியோர் என்பவதும் சட்ட விரோதமாக உடும்பினை வேட்டை யாடியது தெரிய வந்தது.
இது குறித்து வனத்து றையினர் வழக்குபதிந்து பெரியசாமி உட்பட 3 பேரை கைது செய்து அவர்க ளிடமிருந்த உடும்பினை பறிமுதல் செய்தனர். பின்னர் பெரியசாமி உட்பட 3 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






