என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 வாலிபர்கள் கைது
    X

    2 வாலிபர்கள் கைது

    • 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இரு சக்கர வாகனம் திருட முயன்ற

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள சு.ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோமதி. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது 2 வாலிபர்கள் கோமதியின் மோட்டார் சைக்கிளை திருட முயற்சி செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் கையும், களவுமாக பிடித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அத்தியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி (வயது 30), அதே கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (22) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×