என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

    • மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் வண்ணாரம்பூண்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இது தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று வி.களத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் பெண்ணைக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த்(வயது 22), திருமாந்துறையை சேர்ந்த முத்துக்குமார்(21) என்பதும், அவர்கள் சரவணனின் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரையும் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×