என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்தன
- கன மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன
- பெண்கள் உட்பட 6 பேர் பள்ளியில் தங்க வைப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசனே தெரியாதபடிக்கு வங்கக் கடலில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கீழடுக்கு சுழற்சி காரணாமாகவும், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாகவும் வருண பகவான மழையை வாரிக் கொட்டுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் 17 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் நேற்று வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அதிகாலை 1 மணி முதல் இனறு காலை வரை மழை பெய்து கொண்டே இருந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. கன மழையால் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சியில் வசிக்கும் வையாபுரி மகன் பழனிச்சாமி,
காளிமுத்து மனைவி பாப்பா ஆகியோரது குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதனை அறிந்த வருவாய் ஆய்வாளர் அமிர்தலிங்கம், விஏஓ சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று பழனிச்சாமி, பாப்பா மற்றும் ஆபத்தனா நிலையில் குடிசை வீடுகளில் வசிக்கும் பழனிச்சாமி மனைவி செல்வி, நடேசன் மனைவி பாப்பாத்தி, உலகநாதன் மனைவி தஞ்சாயி, சரவணன் பொட்டுக் கண்ணு என 4 குடும்பங்களை சேர்ந்த 1 ஆண், 5 பெண் உட்பட 6 பேரை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைத்தனர்.
மாவட்ட அளவில் கலெக்டர் வெங்கடபிரியா உத்தரவின் பேரில், மழையால் பாதுக்கப்படுவோரை தங்க வைக்க பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கத.






