என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் 16 வயது சிறுமிக்கு திருமணம்
- 16 வயது சிறுமிக்கு, 35 வயதுடையவருடன் திருமணம் நடத்தி வைத்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு உள்ளார்
- சிறுமியுடன் தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமிக்கும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபருக்கு திருமணம் நடைபெற்றது. எறையூர் சக்கரை ஆலை பகுதியில் உள்ள கோயிலில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி திருமணம் நடத்தியுள்ளனர். இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிந்தது. ஆனால் திருமணம் ஆன சிறுமியும், அவரது கணவரும் வெளியூர் சென்று தலைமறைவாகிவிட்டனர். இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து குழந்தை திருமணம் செய்ய உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுமியையும் அவரது கணவரையும் தேடி வருகின்றனர்.
Next Story






