search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை படத்தில் காணலாம்.

    கொடைக்கானலில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

    • ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனம் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தனர்.
    • சாலை மறியல் காரணமாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்நிலைப் பகுதியில் உள்ள மன்னவனூர் ஊராட்சியை சேர்ந்த கைகாட்டி, கண்ணன்புரம் போன்ற பல்வேறு பகுதி களில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் கைகாட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனம் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் வரும் வழியில் மரம் விழுந்ததால் உடைப்பு ஏற்பட்டுள்ள தாகவும் இதனை சீரமைக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும், ஒருசில இடங்களில் பழைய குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், புதிய குடிநீர் குழாய் அமைக்க அரசிடம் நிதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனிடையே சாலை மறியல் காரணமாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×