search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேத்தி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
    X

    கேத்தி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

    • சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கேத்தி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லநள்ளி பஜார் பகுதியில் உள்ள கடைகளில் பேருராட்சி செயல் அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒருசில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    கேத்தி பகுதியில் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தினால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கபடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×