search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு திருவிழா
    X

    அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனி வந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு திருவிழா

    • அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
    • அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 17 நாட்கள் நடைபெற்ற இவ் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

    திருக்கல்யாணம்

    திரு ஏடு வாசிப்பு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 23-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பட்டாபிசேக திரு ஏடு வாசிப்பு திருவிழா நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.பட்டாபிசேக ஏட்டை அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடைபெற்றது.

    கலந்துகொண்டவர்கள்

    விழாவில் திருச்செந்துர் சார்பு நீதிபதி வஷித்குமார், அய்யாவழி அகில திரு குடும்ப மக்கள் சபை இணை தலைவர்கள் பால்சாமி, ராஜதுரை,கோபால், இணைச் செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், செல்வின் வக்கீல் சந்திர சேகர், முன்னாள் இணை தலைவர். சிங்கபாண்டி, முன்னாள் துணை செயலாளர் ராமகிருஷ்ணன்,நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வினோத், சிவாஜி, ராமமூர்த்தி, ஆசிரியர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணைத் தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்தி ருந்தனர். திரு ஏடு வாசிப்புப்பை வைகுண்ட மகராஜன் மற்றும் ஆனந்து குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×