search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடைகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை திறந்து வைக்கிறார்
    X

    உடன்குடி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடைகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை திறந்து வைக்கிறார்

    • கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை காலை வழங்குகிறார்.
    • குலசேகரன்பட்டினத்தில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைக்கிறார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்குகிறார்.

    பகுதிநேர ரேஷன் கடைகள்

    மாலை 4.30 மணிக்கு உடன்குடி ஒன்றியம் வெள்ளாளன் விளையிலும், மாலை 5 மணிக்கு செட்டியா பத்துஊராட்சி மன்றம் சிவலூரிலும் பகுதிநேர ரேஷன் கடைகளை திறந்து வைக்கிறார். மாலை 5.30 மணிக்கு வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி உதிர மாடன்குடியிருப்பில் புதிய அங்கன்வாடி கட்டி டங்களை திறந்து வைக்கிறார். மாலை 6 மணிக்கு குலசேகரன்பட்டினத்தில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைக்கிறார். 18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு கருங்குளம் ஒன்றியம் ராமானுஜம் புதூர் கால்நடை வளர்ப் போர்க்கான முகாமில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×