என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடமதுரை அருகே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம் - ஆசிரியர்கள் கேலி செய்ததால் ஆத்திரம்
- பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
- இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட பூசாரிப்பட்டி, குருந்த ம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் குருந்தம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூசாரி ப்பட்டி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து மாண வர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கையில்,
தங்கள் குழந்தைகள் குளிக்காமலும், சரியான உடைகளை உடுத்தி வராமலும் பள்ளிக்கு வருவதால் அவர்கள் மீது துர்நாற்றம் வீசுவதாக ஆசிரியர்கள் கேலி, கிண்டல் பேசி உள்ளனர். இதனால் மற்ற மாணவர்களிடமும் அவர்கள் சேர்ந்து விளையா டவோ, சாப்பிடவோ முடியாமல் தனித்து விடப்பட்டுள்ளனர்.
கிராமப்புரங்களில் இருந்து வரும் மாணவர்கள் நாகரீகமான உடை அணிந்து எப்படி வருவார்கள். சாதாரண உடையில் தான் பள்ளிக்கு வரமுடியும். ஆனால் அவர்களை ஆசிரியர்களே கேலி செய்தால் மாணவர்கள் எவ்வாறு நடத்துவார்கள்.
எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனையடுத்து புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்களிடம் விசா ரணை நடத்த அதிகாரி களுக்கு பரிந்துரைக்கப்டும் என்றும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களை பள்ளிக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து கிராம மக்கள் குழந்தைகளை பள்ளி அனுப்ப ஒத்து க்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்