பாப்பநாயக்கன்பாளையத்தில் நாளை மின்தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளன.காலை 9 மணி முதல் மாலை 4 மணி நேரம் மின்தடை இருக்கும்.
பாப்பநாயக்கன்பாளையத்தில் நாளை மின்தடை
Published on

கோவை:

பாப்பநாயக்கன்பாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (20-ந்தேதி) மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளன.

எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி நேரம் மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமுநகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.

மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com