search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே பஞ்சாயத்து தலைவர் திடீர் சாவு
    X

    பஞ்சாயத்து தலைவர் முருகன்

    ஆலங்குளம் அருகே பஞ்சாயத்து தலைவர் திடீர் சாவு

    • தி.மு.க.வை சேர்ந்த முருகன் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
    • இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். தி.மு.க.வை சேர்ந்த இவர் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் இறந்தார்.

    Next Story
    ×